யாழ் மாவட்டத்தில் மீள குடியேற்றப்பட்டவர்களுக்காக பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
யாழ் பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட இராணுவ தளபதிகள், வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ , ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அதன் போது யாழ். பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின்
நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
No comments