பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பத்தர் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு , மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த பழனி வடிவேல் (வயது 65) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
No comments