Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பலாலி விமான நிலையத்திற்கு தனியார் காணிகளை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பமாம்


யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு தனியாரிடம் இருந்து காணியினை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளததாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  வலிகாமம் வடக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது  ஆட்சியில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் கட்டுவன், கட்டுவன் மேற்கு,   மயிலிட்டி தெற்கு, குரும்பசிட்டி  மற்றும் குப்பிளான் வடக்கு   உட்பட்ட காணிகள் உள்ளடங்கலாக 500 ஏக்கர் காணியினை யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு சுவீகரிப்பதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை முடிவெடுத்து காணித்திணைக்களம் ஊடாக அளவீட்டு பணிகளை  ஏற்பாடு செய்துள்ளது.

அந்நிலையில் , நேற்று முன்தினம் காணி சுவீகரிக்கும் நோக்குடன் அப்பகுதி காணிகளை அளவீடு செய்வதற்கு காணி திணைக்கள அதிகாரிகள் வருகை தந்த போது , அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து , அளவீட்டு பணியை கைவிட்டு சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


No comments