போதைமாத்திரைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைதாகியுள்ளார்.
வெனிசுலாவைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலைத்ததை வந்தடைந்துள்ளார்.
அவரிடம் இருந்து 132 கிராம் எடையுடைய 12 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன
No comments