Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெடுக்குநாறிமலையில் கைதான 08 பேரும் விடுதலை.


வெடுக்குநாறிமலையில்  கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்து வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , எட்டு பேரும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கபட்டனர். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதவான்  வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். 

No comments