Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெடுந்தீவில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இரண்டு படகுகளில் கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 21 தமிழக கடற்தொழிலாளர்களை , கடற்படையினர் கைது செய்திருந்தனர். 

 கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் , கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , 21 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

No comments