Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெல்லியடியில் கசிப்பு குகை முற்றுகை - 600 லீட்டர் கோடா உள்ளிட்டவை மீட்பு


யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , அங்கிருந்து 600 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன நேற்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்ட இடமொன்றினை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டனர். 

அதன் போது , அங்கு சந்தேகநபர்கள் எவரும் இல்லாத நிலையில் , அங்கிருந்து 600 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments