Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் - 8 பேர் கைது!


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பொலிஸார் குழப்பங்களில் ஈடுபட்டனர். 

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், கட்டளை இட்ட பொலிஸார் , தமது கட்டளையை மீறினார்கள் என 08 பேரை கைது செய்தனர். 

அதேவேளை ஆலயத்தில் இருந்த அன்னதானம், பொங்கல் ,  பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் , பெறுமதியான பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

அத்துடன் சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் பூஜையில் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். 





No comments