வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பொலிஸார் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், கட்டளை இட்ட பொலிஸார் , தமது கட்டளையை மீறினார்கள் என 08 பேரை கைது செய்தனர்.
அதேவேளை ஆலயத்தில் இருந்த அன்னதானம், பொங்கல் , பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் , பெறுமதியான பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
அத்துடன் சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் பூஜையில் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
No comments