முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்கியதில் தாக்குதலை நிறுத்த சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.
No comments