Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களால் மகஜர் கையளிப்பு


முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்துள்ளனர். 

மாவட்ட செயலகத்துக்குச் சென்ற கேப்பாப்பிலவு மக்கள் மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதிக்கு மாவட்ட செயலர் ஊடாக மகஜரை கையளித்துள்ளனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். 

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments