தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் முன்னதாக வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் மற்றும் விருது பெறுபவர்கள் மேளதாளங்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் ஊடகத்துறை சார்பில் தீம்புனல் பத்திரிகையின் ஆரியர் ஏ.ரவிவர்மா, ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் ஏ.தேவராஜன், சக்தி ரி.வி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் வி.கஜீபன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் க.ஹம்சனன், டான் ரி.வி தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் இ.நிர்மல் உள்ளிட்டோருக்கும், வைத்திய துறை மற்றும் சமுகசேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த 20 பேருக்கு ''தந்தை செல்வா விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு மூக்குகண்ணாடி வில்லைகளும் வழங்கி வைக்கப்பட்டது.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments