Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறைச்சாலைக்கு எடுத்து வந்த பற்பசைக்குள் போதைப்பொருள் - ஒருவர் கைது


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதை அடுத்து , அதனை கொண்டு வந்தவரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக பார்வையாளர் ஒருவர் வந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபருக்கு கொண்டு வரப்பட்ட பற்பசையில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும், ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனை நடவடிக்கையில் அதனை கண்டறிந்து அதனை எடுத்து வந்த  சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments