Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் ஆட்டுமந்தையில் 35 ஆடுகளை திருடியவர் கைது


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து  35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்றுள்ளது. 

குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து 35ஆயிரம் ரூபாய்  பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பில்  வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  அவரிடமிருந்து 15 ஆடுகள்  மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments