Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் விமான படை வீரர் உயிரிழப்பு


பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், பொலிஸாரின் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனையடுத்து பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேனை உயிரிழந்தவர் ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments