Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். போதானவிற்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தவருடன் முரண்பட்ட உத்தியோகஸ்தர்


 யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்திய சாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அதன்போது, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்திய சாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் போது இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது பிரின்டரால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய சக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஒன்று கூடி தாக்குதலாளியை மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments