Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாதகல் கடலில் கரையொதுங்கிய படகு - தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் மீட்பு


யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகொன்றில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் தமிழக படகொன்று மூன்று கடற்தொழிலாளர்களுடன் கரையொதுங்கியுள்ளது. அவர்களை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் மீட்டதுடன் , சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள். 

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த இளவாலை பொலிஸார் தமிழக கடற்தொழிலாளர்கள் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த போது , படகு பழுதடைந்தமையாலையே கரையொதுங்கியதாக தெரிவித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments