Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு


பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள் , பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கதைத்தார்கள். 

அதன் போது போது , பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன். அவர்களும் , பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறினார்கள். 

அப்போது நான் கூறினேன், பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வினை நடாத்தி ,அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்துவோம் என்றேன். அதற்கு அவர்களுக்கும் சம்மதித்தர்கள். 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது , இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதற்கவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளேன் என தெரிவித்தார் 

No comments