Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முல்லைத்தீவு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்துறையில் கைது


முல்லைத்தீவு நீதிமன்றத்தால் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் ஊர்காவற்துறை பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றினால் ,ஐந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் , குறித்த நபர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள நிலையில் , அவரை மாங்குளம் பொலிஸ் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments