Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை பொலிஸாருடன் இணைந்து தேடும் ஊரவர்கள்


நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊர் இளைஞர்களும்  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்துடன் நான்கு சந்தேகநபர்கள் தொடர்பு பட்டுள்ள நிலையில் , ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூவர் தலைமறைவாகியுள்ளனர். 

தலைமறைவாகியுள்ள மூவரும் நெடுந்தீவு பிரதேசத்தை விட்டு தப்பி செல்லாதவாறு , கடற்படையினர் , ஊரவர்கள் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை தலைமறைவாகியுள்ள மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்ய கோரி கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் ஊரவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்குடன் , நெடுந்தீவு பொலிஸார் நெடுந்தீவில் சந்தேகத்திற்குரிய இடங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது ,ஊரவர்களும் பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

No comments