நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள நுகர்வோர் சட்டம் கடந்த 20 வருடங்களாக திருத்தம் செய்யப்படவில்லை.இதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதுள்ள சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது சட்ட மாஅதிபரின் கவனத்துக்கு இது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
No comments