தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட சிலர் இந்த மனுக்களை சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த மனுக்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
No comments