Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊர்காவற்துறையில் யுவதி கடத்தல் - மூவர் கைது


யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் நின்றவர்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். 

அதற்கிடையில் கடத்தி சென்ற யுவதியை ஊர்காவற்துறை பிறிதொரு பகுதியில் வீதியில் இறக்கி விட்டு தப்பி, கடத்தி சென்ற நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 

இருந்த போதிலும் பொலிசரின் தீவிர நடவடிக்கையை அடுத்து , யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments