Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம்


கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம்   03 பில்லியன் டொலர் கடன் வெட்டிவிடப்பட  இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு  08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் முழுமையான  காணி உறுதிகளை வழங்குவதற்கான 'உறுமய' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73ஆயிரத்து 143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. 

அதன் முதல் கட்டமாக குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

No comments