Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

டுபாயில் பதுங்கியிருந்த இருவர் கைது


இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் டுபாயில் பதுங்கியிருந்த நிலையில் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சாமந்த டி சில்வா என அழைக்கப்படும் 'பாபி' மற்றும் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான கங்கனம்லாகே திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கனம்லாகே திமுத்து சதுரங்க பெரேரா  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சாமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments