நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். tamilnews1
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர். tamilnews1
அதன் போது , கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை கடற்தொழிலாளர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. அதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். ஏனைய மூவரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு ,காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை , காணாமல் போன கடற்தொழிலாளரை தேடும் நடவடிக்கையிலும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை இலங்கை கடற்படை மாலுமி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. tamilnews1 tamilnews1 tamilnews1 tamilnews1
No comments