Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஏழு மாதங்களுக்கு பிறகு கெஹெலிய உள்ளிட்டோருக்கு பிணை


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்ததை அடுத்து, அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 

No comments