Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். மகளை கர்ப்பமாக்கிய குற்றத்தில் தந்தை கைது


தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 23 வயதான யுவதி ஒருவர், அவரது தந்தையால் , பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பும் செய்துள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பிரகாரம் முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யுவதியை மீட்டு வாக்குமூலங்களை பெற்றதுடன் , யுவதியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

அதேவேளை யுவதியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 53 வயதான யுவதியின் தந்தையை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 


No comments