யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பர திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
நாளைய தினம் சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் , ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
No comments