Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 10 வயது மகளை துன்புறுத்திய ஆசிரியர் கைது


தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக இளவாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தையை கைது செய்துள்ளனர். 

அதேவேளை மாணவியை மீட்ட பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , தந்தையிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments