Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஓமந்தையில் விபத்து - இருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் வவுனியா, ஓமந்தை பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இவ் விபத்து இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டிடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் ஜனிதரன் (வயது 46) மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் யோகராசா (வயது 49) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 

 சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments