பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, தீக்காயங்களுக்கு உள்ளான 7 மாணவிகள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
No comments