Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறையில் 12 உணவகங்களுக்கு தண்டம்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது சுகாதர சீர்கேடுகளுடனும் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 12 உணவு கையாளும் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு , அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளர்கள் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை எச்சரித்த மன்று , அவர்களுக்கு ஒரு லட்சத்து 35ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.  

No comments