Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அரியாலை புதிதாக அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலை




யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. 

அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை கண் வைத்தியசாலைக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். 

அக் காணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தலைமையில் மரநடுகை செய்யப்பட்டது. 

 நிகழ்வில் யாழ் . போதனா வைத்தியசாலை உதவி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா , கண் வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன் யாழ் . பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரும் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இன் முதன்மை வேட்பாளருமான கி.கிருஸ்ணமீனன் , சக வேட்பாளர்   லோகநாதன் சுஜிதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குறித்த காணியில் கண் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் , அது வடமாகாண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் , நன்கொடையாளர்கள் , பொதுமக்கள் வைத்தியசாலை நிர்மாணிப்புக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரியுள்ளார். 





No comments