மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளைய தினம் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments