Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு


கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர், படோவிட்ட பிரதேசத்தில் வசித்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் ஊடாக இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments