Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

1,800 மில்லியன் ரூபா பண மோசடி- சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது


பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

52 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரிமிட் வர்த்தகம் ஊடாக சுமார் 1,800 மில்லியன் ரூபா பண மோசடியை செய்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்னதாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்ற அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

No comments