Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு


முந்தல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில்  மின்சாரம் தாக்கி கணவனும் , மனைவியும் உயிரிழந்துள்ளனர். 

அப்பகுதியைச் சேர்ந்த சேனாநாயக்க ஆராச்சிலாகே ஸ்டான்லி திலகரத்ன (வயது 55) மற்றும் மாரசிங்க ஆராச்சிலாகே சந்திரிகா மல்காந்தி (வயது 52) ஆகிய மூன்று பிள்ளைகளின் தாய், தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலுள்ள மின்கம்பி எரிந்து அதிலிருந்து புகை வெளியாகுவதை அவதானித்த அந்த மின்கம்பியை அகற்றுவதற்கு கணவன் முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது.

கணவன் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதை அவதானித்த அவரது மனைவி, அவரை காப்பாற்றுவதற்காக முற்பட்ட போது மனைவியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள்; உடடினயாக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவ்விருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments