Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உயர்தர பரீட்சை இடைநிறுத்தம்


நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

No comments