Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாரும் இன்றி நின்ற இந்திய விசைப் படகு கடற்படையினரால் மீட்பு


5 ஆம் தீடையில் நின்ற இந்திய விசைப் படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் மீட்டு மன்னாருக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு என நம்பப்படும் இந்தப் படகு இலங்கைக் கட்டுப்பாட்டில் உள்ள 5 ஆம் தீடை அருகே மீனவர் எவரும் இன்றி நின்ற சமயமே நேற்று  இரவு கடற்படையினரால் மீட்கப்பட்டு மன்னார் இறங்குதுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் படகில் அதிக மீன்களும், எரிபொருளும் காணப்படுகின்றபடியால் இயந்திரக் கோளாறு காரணமாகத் தமிழக மீனவர்கள் படகைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

No comments