Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்


பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 8821 வேட்பாளர்களும் 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். குறித்த காலப்பகுதியில் விபரத்திரட்டை சமர்ப்பிக்காவிடின்  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தல் நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில்  நிறைவடைந்துள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், அரச மற்றும் தனியார் தரப்பினருக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

No comments