Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் நியமனம்


சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இந்த நியமனம் இன்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய குழு உறுப்பினரான காசிலிங்கம் கீதநாத் 2024 நவம்பர் 11ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், கட்சியின்  யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பிரதான அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார் எனவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  எதிர்காலத்தில் நடைபெறும் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஊடகங்களுக்கான கருத்துகள் உள்ளிட்ட சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி சார்ந்த அனைத்து செயற்பாடுகளும் கீதநாத் காசிலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியினை எதிர்காலத்தில் வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நியமனம் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சேவைகளை இன்னும் வேகமாக முன்னெடுக்க உதவும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments