Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழர்களின் விரக்தி , தென்னிலங்கை கட்சிக்கு வாக்காக மாறக்கூடாது


தமிழ் மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அந்த விரக்தி தென்னிலங்கை கட்சிக்கு வாக்காக மாறக்கூடாது. மாறினால் தேசியத்திற்காக உயிர்களை அர்ப்பணித்தவர்களை சிறுமை படுத்துவதாக அமைந்து விடும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். 

வீடியோ :- https://www.facebook.com/share/v/18RK9zY6gg/

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இம்முறை தேர்தல் களைகட்டவில்லை.மக்கள் விரக்தியில் உள்ளனர். இந்த விரக்தி நிலையை மாற்றான் வந்து அறுவடை செய்து போக போகிறான். அவ்வளவும் எங்கள் தமிழ் இனத்திற்க்கு பின்னடைவு 

ஆகவே தமிழர்கள் தமிழனுக்கு வாக்களியுங்கள். ஒரு கட்சி பிடிக்கவில்லை என்றால் மற்றைய தமிழ் கட்சிக்கு வாக்களியுங்கள். தென்னிலங்கை கட்சிகளை நோக்கி இளையோர் செல்பவது தமிழர்களுக்கு ஆபத்தானது.  

தேசியத்திற்காக உயிர்களை அர்ப்பணித்தவர்களை சிறுமை படுத்துவதாக அமையும். நாங்கள் உடைந்து போயுள்ளோம். திருகோணமலை பறிபோகிவிட்டது. அம்பாறை பறிபோகிவிட்டது. தற்போது முல்லைத்தீவு பறி போய்க்கொண்டு இருக்கிறது. அந்த நிலை தொடர கூடாது.

எங்களுடைய அரசியல் சரியான முறையில் நகர வேண்டும் ஆயின் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். ஆகவே தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்காது , தமிழ் கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 


No comments