Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்னாள் எம்.பி திலீபன் உள்ளிட்ட இருவரும் பிணையில்


வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.

15 இலட்சம் ரூபாய் காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபனின் பிரத்தியேக செயலாளரை நேற்றையதினம் வியாழக்கிழமை மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர். 

அதனை அடுத்து நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, அவர்கள் இருவரும் , 3 இலட்சம் ரூபாய் பணத்தினை முறைப்பாட்டாளருக்கு செலுத்திய நிலையில், இருவரையும் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. 

No comments