Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுழிபுரத்தில் சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி


சுழிபுரத்தில் சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலகம் , வேல்ட் விஷன் நிறுவனம் மற்றும் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையம் என்பன இணைந்து முன்னெடுத்த பயிற்சி  பட்டறையினை சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

18 வயதிற்குட்படட சிறுவர்களுக்கான உரிமைகள் ,சிறுவர் சார்ந்த சட்டங்கள் சட்டத்தரணி சாருஜாவின் வழிகாட்டலில்  சட்டத்தரணிகளான தர்ஷிகா மற்றும்  கஸ்தூரியால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பயிற்சி பட்டறையில் கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் புலம்பெயர் தேச நிதிப்பங்காளர் தர்மினி நித்தியானந்தன் ,கலைமகள் இலவசக்கல்வி நிலைய உபதலைவர் தலைவர் சிவானந்தன் , செயலாளர் சுபகரன் , சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ்,சட்டத்தரணிகள் , மாணவர்கள் ,கணக்காய்வாளர் பஞ்சலிங்கம் என பலரும் கலந்து கொண்டனர்






No comments