Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் கைதான தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்


நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 08 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுகாவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்றைய தினம் சனிக்கிழமை தமிழக கடற்தொழிலாளர்கள் எட்டு பேரை கைது செய்தததுடன், அவர்களின் இரு படகுகளையும் கைப்பற்றினர்

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சாளினி ஜெயபாலசந்திரன் முன்னிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய போது, 08 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments