Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறையில் கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லிபுரம் பகுதியை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. 

குழந்தை வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொன்டு இருந்ததாகவும் , திடீரென குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் , குழந்தை கிணற்றினுள் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 

குழந்தையை உடனடியாக மீட்டு ,  பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments