Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈபிடிபி கட்சி வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்


பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை  அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024  பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்  அஹமட் லெப்பை  அன்சார் (வயது-45) என்பவரின்   வீட்டின் மீது கடந்த 30ஆம் திகதி இரவு கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் மருதூர் அன்சார் தனக்கு அண்மைக்காலமாக  இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் செய்ததாகவும் பின்னர் இவ்வாறு வீட்டின் மீது  மேற்கொண்ட கழிவு ஒயில் தாக்குதலில் வீட்டின் நுழைவாயில் உட்பட சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர  முகநூலில் சில தவறான விடயங்களை உட்செலுத்தி சில நபர்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே கல்முனை மாநகர சபையில் முன்னாள் உறுப்பினராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments