Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பன் இந்தியாவே ...

 


“இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, “நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. நம் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் 76ஆவது குடியரசு தின செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம்.

நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. எங்களின் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது.

எங்கள் புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது.

மேலும், ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும்.

இந்தியா இலங்கையின் நம்பகமான சகா என்பதை இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது.

எங்கள் ஆதரவு உரிய தருணத்தில் விரைவானதாக நிபந்தனையற்றதாக காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 





No comments