Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாரிந்த மாவை சேனாதிராசா ....


மாவை சேனாதிராசா அவர்களின்  இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா.  தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்ப கல்வியும் நடேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தரக்கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியலில்…

இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மயசீன், சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.                                       

1977, ல் மாவை சேனாதிராசா மணமகளாக தமது உறவுமுறை பவானி என்பவரை திருமணம் முடித்தார்.

1977, ல் திருமணம் நடந்த பின்னர் அதே ஆண்டு கவிஞர் காசி ஆனந்தனுக்கும் திருமணம் இடம்பெற்றது.

மாவை சேனாதிராசா தம்பதிகளையும், கவிஞர் காசி ஆனந்தன் தம்பதிகளையும் ஒரே நாளில் இரண்டு தம்பதிகளுக்கும் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வரவேற்பு வைத்து விருந்தோபல் இடம்பெற்றது எனக்கு இப்போதும் ஞாபகம் உண்டு.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப், ஈபிஆர்எல்எஃப், டெலோ ஆகிய கட்சிகளுடன் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை. 

அதன் பின்னர்  அப்பாப்பிள்ளை . அமிர்தலிங்கம் 1989 யூலை 13, ல் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.                                             

அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூடுதலாக அம்பாறைமாவட்டத்திற்கே பயன்படுத்தினார்.

பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியமனங்களை வழங்கியதுடன் பன்முகப்படுத்தப்பட் நிதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களுக்கே ஒதுக்கியும் இருந்தார் பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப்படுத்தக்பட்ம நிதிமூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1994,தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூலமாக தேர்தலில் போட்டியிட்டபோதும் தெரிவாகவில்லை.

1999 யூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000, ம்  ஆண்டு தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி  வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.             

விடுதலைப்புலிகளின் வேண்டுகோளால் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியால் 2001 அக்டோபர் 20, ல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவிய பின்னர் .2001 தேர்தலில் யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.            

அந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 பாராளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர்  விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாராளுமன்ற குழு கூட்ட தீர்மானம் எடுத்தபோது ஆனந்தசங்கரி ஐயா அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்டபோது, மாவை அண்ணர் விடுதலைபுலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். ஆனந்தசங்கரி மாவை அண்ணர், சம்பந்தன் ஐயா, ஜோசப்பரராசசிங்கம் ஆகியோருடன் முரண்பட்டு தமிழர் விடுதலை கூட்டணியை நீதிமன்றில் நிறுத்தி தடை உத்தரவை பெற்றார்.

2004, ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கட்சியில் தேர்தலை எதிர்கொள்வது என்ற கலந்துரையாடல் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.அந்த சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் தத்தமது கட்சிகளில் பொட்டியிடலாம் என கூறியபோது தலைவர் பிரபாகரன் மாவை அண்ணரிடம்தான் கேட்டார் இலங்கை தமிழரசுக்கட்சி என்ன நிலையில் இருக்குது அண்ணா என கேட்டார். மாவை அண்ணர் எந்த பிரச்சனையும் இல்லை தம்பி நீங்கள் சம்மதித்தால் அதில் போட்டியிடலாம் என கூறினார்.

அதனை கேட்டு தலைவர் இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் வீட்டு சின்கத்தில் போட்டியிடுமாறு பணித்தார்.

அதன்பின்னர் 2004, 2010, 2015 ,தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020, தேர்தலில் போட்டியிட்டும் 20358, வாக்குகளை பெற்றும் அவர் தெரிவாகவில்லை.

தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004, தொடக்கம் 2014, வரையும் பின்னர்

வவுனியாவில் நடந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 15, வது தேசிய மாநாடு

2014,செப்டம்பர் ,07,ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2024, பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியில் சிலருடைய கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாகவும் அந்த பதவியை 2024, ஜனவரி,21, ல் ஜனநாயக ரீதியாக தெரிவாக சிவஞானம் சிறிதரனை பாரம் எடுக்குமாறு கடிதமூலம் கேட்டிருந்தார்.

சிறிதரன் தொடர்ந்தும் அடுத்த மாநாடு வரை நீங்களே தலைவராக இருங்கள் என கூறியதை ஏற்றிருந்தார்.

எனினும் சிறிதரனுக்கு தான் வழங்கிய கடிதப்பிரதியை பதில் பொதுச்செயலாளர் ப சத்தியலிங்கத்துக்கு அனுப்பியபின்னர் 2024, டிசம்பர்,14, ல் வவுனியாவில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் மாவை அண்ணரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்க முற்பட்ட வேளையில் கருத்து முரண்பாடுகள், வேண்டத்தகாத வார்த்தை பிரயோகங்கள் மத்தியகுழு சில உறுப்பினர்களால் பேசப்பட்டது.

தாம் தொடந்தும் தலைவராக செயல்பட போவதாக அவர் மனம்விட்டு கேட்டபோதும் மத்தியகுழுவில் உள்ள ஒரு சாரார் விரும்பவில்லை.

இந்நிலையில் அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் 2024, டிசம்பர்,28, ல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்த கூட்டத்தில் மாவை அண்ணர் கலந்து கொள்ளவில்லை அவருடைய தலைவர் பதவி சி வி கே சிவஞானம் ஐயாவுக்கு பதில் தலைவராக வழங்கப்பட்டது.

மாவை அண்ணருக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக கடந்த 2014, செப்டம்பர்,07 தொடக்கம் 2024, டிசம்பர்28, வரையும் ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராகவும்.

அதற்கு முன்னர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004, தொடக்கம் 2014, வரை 10, வருடங்கள் பதவியில் இருந்துள்ளார்.

உடல்சோர்வு, மனச்சோர்வு காரணமாக 28/01/2025, அதிகாலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 29ஆம் திகதி காலமானார்.

-பா.அரியநேத்திரன்-

29/01/2025

No comments