Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவையருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி - இறுதி கிரியை ஞாயிற்றுக்கிழமை


தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர் 

மாவை சேனாதிராசா கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தவறி விழுந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார். 

அவரது புகழுடல் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் , அரசியல் தலைவர்கள் , பொது அமைப்பினர் , மதகுருமார்கள் , மக்கள் என வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இருந்தும் பல்வேறு தரப்பினர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று, தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்று , மதியம் ஒரு மணியளவில் தச்சன்காடு இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  

No comments